Thursday, February 16, 2012
17.YOU ARE MY GOD OF LOVE IN HEART
Thou were on earth in human sheath.. To Shower Thy grace that’s so sweet..!
Thou are the truth that created the sky, Thou were on earth that descended from sky
Though Thou form shall not be seen..Sure Thou reside in hearts so keen..!
The music of Vedha chanted in cheer .. is the honey that flows in ears
Melts the heart to wet with love .. shows Thine form right here and now..!
Chant the Vedha even we don’t , Think Thy Paadha even we don’t
Through that selfless Seva we do..Shower Thy happy Grace that Thou show
Thou are the doctor that cures the mind.. Thou are the mother that pours the Kind
Stop the thought of me and Mine..Please be with us ever to shine..!
Thou Anna poorni that feeds hungry ..and are the Saraswathi that lifts brainy..
Thou are the light not so easy ...Oh!.. my Mother please be with me..!
Thou are the God of Great Bharath .. Thou are the peerless King of Sath
Thou are the clouds that gives water. . Quietly thou quench with no flutter..!
Thou are the Universe and made it too ... Thou are the atom and within it too..
Thou are the God in the hearts so true.. Please don’t leave us save us too..!
Thou are the effortless rising light.. Thou are the endless Being bright
Thou make every thing in life .. Thou are the life and life in life …!
Oblations.. Oblations.. at Thine feet..
Success is Ever.. With Thou in heart..
We chant Thy glory none can thwart..
You are my God of Love in heart..!
16.சாய் திருப்புகழ்
( ராகம் : செஞ்சுருட்டி
மெட்டு : அருணகிரி நாதரின் திருப்புகழ் : நாத விந்து கலாதி நமோ நம..! )
புட்டபர்த்தி நிவாசா நமோ நம .. கேட்ட வரம் தரும் ஈசா நமோ நம
மாய மானுஷ வேஷா நமோ நம.. அருள் செய் சாயீசா..!
விண்ணைப் படைக்கின்ற மெய்யான சிறப்பு நீ .. மண்ணில் வருகின்ற தெய்வத்தின் பிறப்பு நீ
கண்ணில் காணாது சென்றாலும் என்றும் நீ… நெஞ்சில் உறைவாயே ..!
வேத மந்திரம் இசையோடு ஓதலால் .. காதில் தேன்வந்து பாய்கின்ற தாதலால்
ஈர நெஞ்சாலே நாம் கொண்ட காதலால் .. காட்சியும் கொடுப்பாயே ..!
வேத மந்திரம் ஓதாத போதிலும் .. போதன் உன்பதம் நினையாத நாளிலும்
பேதம் மனதினில் இல்லாத சேவையால் .. மகிழ்ந்தே அருள்வோனே ..!
மனதின் நோய்களைத் தீர்க்கின்ற தெய்வம் நீ .. உடலின் நோய் தீர்த்து அணைக்கின்ற தாயும் நீ
எனது நான் என்ற எண்ணத்தைப் போக்கு நீ .. உன்னில் சேர்ப்பாயே ..!
உயிரின் பசிபோக்கும் அன்னத்தின் பூரணி .. அறிவின் பசி போக்கும் சரஸ்வதி தேவி நீ
விரைவில் கிடைக்காத வானத்தின் ஜோதி நீ.. எம்முள் இரு தாயே ..!
பார்புகழ் பாரதம் தோன்றிடும் தெய்வம் நீ.. ஓர் இணை இல்லாத திறத்திலே மன்னன் நீ
பாரினில் நீர் தந்து காத்திடும் மேகம் நீ .. தாகம் தீர்த்தாயே ..!
அண்டம் படைத்திங்கு எல்லாமு மானவன் அணுவின் உள்ளேயும் அணுவேநீ ஆனவன்
தொண்டரின் உள்ளத்தில் உறைகின்ற ஆண்டவன் .. எம்மைக் காப்பாயே ..!
தோன்றி வளர்கின்ற சுயமான சோதி நீ .. என்றும் உறைகின்ற விதமான ஆதி நீ
மண்ணில் பிறக்கின்ற யாவிலும் உயிரும் நீ .. உயிரின் உயிர் நீயே ..!
போற்றி போற்றி நின் பாதங்கள் போற்றியே .. வெற்றி வெற்றி எம் நெஞ்சில் நீ நின்றிட
சாற்றி சாற்றிப் பறை செய்வோம் நாங்களே .. அருள் செய் சாயீசா..!
15. ஸ்வாமி என்னும் சொல்லிலே ஈரம் ஊரும் நெஞ்சிலே
ஏமிஏமி என்னும்ஒலி காதைவந்து எட்டுது
நம்மில்நம்மில் என்றுஉன்னை நம்பிநாங்கள் நிற்கையில்
ஓமில்ஓமில் நின்றிருக்க ஓடிசெல்லல் நியாயமோ..!
விரைந்துநெஞ் செரித்தசேதி பற்றியதீ பஞ்சிலே
மறைந்துநீ இருந்திருப்ப தென்றுமெங்கள் நெஞ்சிலே
நிறைவுறாது நீயுமிங்கு விட்டுசென்ற உன்'இடம்'
சிறப்புறாது எங்கள்நெஞ்சம் சிறைப்படாம லுன்னிடம்
கறைபடாத நெஞ்சம்கொண்டு சேவைசெய்யப் பழகுவோம்
கரைந்தநெஞ்சின் ஈரம்கொண்டு பாவம்தன்னைப் போக்குவோம்
பறந்திடாத வண்ணம் நெஞ்சில் என்றுமேநீ தங்கிடு
விரைந்துநீயும் பிரேமசாயி வடிவம்தன்னில் வந்திடு
பாடிய நெஞ்சினில் ஒளிர்ந்திடும் கூடி
சோதிமுன் வானத்தில் தெரிந்திடும் கோடி
சூரியன் நாணியே ஒளிந்திடும் ஓடி
நாடியே நின்புகழ் சொல்லிடக் கோடி
கோடியே பாவலர் யாவரும் கூடி
கோடியே நாவுறச் சொல்லினும் பாடி
முடிந்திடும் பின்வரும் யுகங்களும் கோடி
முடிந்திடும் பின்வரும் யுகங்களும் கோடி
ஓம் ஸ்ரீ சாய்ராம்
14.அற்புதத்தின் அற்புதம்
ஸ்வாமிசெய்த அற்புதம் கணக்கிலடங் காதது
பூமிதன்னை இயக்கிடும் இறைக்குமது எளியது
பாவியாகி டாமலே பதம்பணிந்து லீலைகள்
அனைத்தும்சொல்லி முடித்திட எந்தன்ஜன்மம் சிறியது
ஒன்றிரண்டு மாவது சொல்லிடவே செய்திட
என்னால்எங்கு இயலுது செய்தமுயற்சி யானது
அதுவும்அவன் அருளில்விளையும் அற்புதமேதானது
எதுவுமவன் அருளில்லாமல் வேறெதனால் நடக்குது
எதுவுமவன் அருளில்லாமல் வேறெதனால் நடக்குது
_____________
தத்திதத்தி யேஅலை கரைகடந்து வந்ததே
பீதியிலே மக்களும் ஆசிரமம் சென்றனர்
பாதத்திலே ஒடுங்கிட பாய்ந்து ஓடிச்சென்றனர்
பர்த்திநாதன் பார்த்தனன் மனதில் கருணைகொண்டனன்
கரைந்துமனம் உருகினன் எழுந்துமாடி ஏறினன்
விரைந்துவரும் சித்ராவதி நதியின் அலையைநோக்கியே
திறந்தவாயி லிருந்துசாந்தி சாந்திஎன்று சொல்லியே
கரத்தினாலே சென்றிடுக என்றுசைகை காட்டினன்
விரைந்தஅலையும் நின்றது திரும்பிப்பின்னால் சென்றது
துரத்திவந்த துன்பம்போக மக்கள்மனமும் நிறைந்தது
சிறந்திருக்கும் அற்புதமாய்த் தானேஅதுவும் அமைந்தது
_____________
மனதில்சிறந்த பக்தராம் குணத்தில்உயர்ந்த வெள்ளையர்
மனதும்மகிழு மாறுமே சிலுவைஒன்றை ஆக்கியே
கணத்தில்கரத்தில் கொடுத்தனன் ஊமையாகச் செய்தனன்
கொடுத்தசிலுவை தன்னுமே அங்குலமாம் அளவிலே
விடுத்தஉயிரும் சென்றிட களைத்துதோன்றும் ஏசுவின்
உருவம்தன்னை தாங்கிய மரத்திலான சிலுவையாம்
வயதுமென்ன என்றுமரத்தை ஆய்வுசெய்து கண்டதில்
வருடம்இரு ஆயிரமாம் *புனிதன்மறைந்த நாளதுவாம்
இறையின்தூதன் ஏசுவின் உயிர்பிரிந்த கணத்திலே
தோன்றிநின்ற கோலத்தின் அச்சுஉருவம் தானிது
சிலுவைசெய்த மரமுமே அசலிலிருந்து வந்தது
என்றுஸ்வாமி சொன்னது உண்மைஎன்று புரிந்தது
*புனிதன் = ஏசு
_________________
3
மனதும்மகிழு மாறுமே சிலுவைஒன்றை ஆக்கியே
கணத்தில்கரத்தில் கொடுத்தனன் ஊமையாகச் செய்தனன்
கொடுத்தசிலுவை தன்னுமே அங்குலமாம் அளவிலே
விடுத்தஉயிரும் சென்றிட களைத்துதோன்றும் ஏசுவின்
உருவம்தன்னை தாங்கிய மரத்திலான சிலுவையாம்
வயதுமென்ன என்றுமரத்தை ஆய்வுசெய்து கண்டதில்
வருடம்இரு ஆயிரமாம் *புனிதன்மறைந்த நாளதுவாம்
இறையின்தூதன் ஏசுவின் உயிர்பிரிந்த கணத்திலே
தோன்றிநின்ற கோலத்தின் அச்சுஉருவம் தானிது
சிலுவைசெய்த மரமுமே அசலிலிருந்து வந்தது
என்றுஸ்வாமி சொன்னது உண்மைஎன்று புரிந்தது
*புனிதன் = ஏசு
_________________
3
வால்டர் கோவன்என்கிற வெள்ளைக்காரர் ஒருவரும்
உயிர்பிரிந்து படுக்கையில் கிடந்திருக்கும் வேளையில்
உயிர்கொடுத்து அவரைஓர் உறக்கம் கொண்டு எழுவதாய்
செயல்படுத்தி வைத்தது அற்புதமே தானது
_________________
அண்டம்தன்னைப் படைத்தஇறைவன் கண்டுநாமும் மகிழ்ந்திட
அண்டமாக லிங்கம்தன்னைப் படைத்தெடுத்தான் கண்பட
தங்கலிங்கம் ஸ்படிகலிங்கம் போன்றயாவும் சிறந்ததாய்
வந்தவண்ணம் இருந்தயாவும் ஆத்மலிங்கம் ஆகுமே
_________________
அமரநாதன் உறையும்இமயக் குகையில்வாழும் பறவையும்
விரைந்துவந்து போட்டதுவாம் சிறந்தபக்தர் கைகளில்
சிறந்துதோன்றும் அதுவும்நல்ல அழகியதோர் லிங்கமாம்
விரைந்துசென்று பர்த்திவாழும் பக்தர்ராம தாசிடம்
அளித்திடவே குரல்கொடுத்து சென்றதுவாம் பறவையும்
கனிந்திடவே அவர்மனதில் எழுந்ததுவாம் ஆனந்தம்
கனிந்திடவே அவர்மனதில் எழுந்ததுவாம் ஆனந்தம்
_________________
6
நிஜமாய்த்தோன்றும் இறைவன்வடிவன் தன்னைநிழலில் பிடித்திட
சிவனின்வடிவ மாகத்தலையில் தோன்றும்அழகுப் பிறையுடன்
எவருமறியும் அன்பின்தோற்றம் ஏசுசிலுவை மார்பிலும்
தெரிவதாக அமைந்த படங்கள் இன்றுமுண்டு பர்த்தியில்
_________________
எவருமறியும் அன்பின்தோற்றம் ஏசுசிலுவை மார்பிலும்
தெரிவதாக அமைந்த படங்கள் இன்றுமுண்டு பர்த்தியில்
_________________
7
பிறந்தஉயிரின் நோயின்கொடுமை தீர்த்துக்களைந்த நிகழ்வுகள்எண்ணிறந்த தாகும்கணக்கில் சொல்லிடுதல் அறிதுமாம்
இறையுருவின் செயலுமின்றி மாந்தர்செய்தல் இயலுமோ?
பறைஎனவே சாற்றிடவே ஆகும்வருடம் பலவுமாம்
_________________
8
பிறந்தமக்கள் வாழ்ந்திட சுரந்தநீரின் ஊற்றினை
விரைந்துமளித்த கருணையால் சிறந்தஊரும் ஆயிரம்
நிறைந்தகருணை தனக்குக் காலம் கடந்துசாட்சி யாயிரும்
நிறைந்தகருணை தனக்குக் காலம் கடந்துசாட்சி யாயிரும்
அன்புத்தந்தை இல்லையேல் வறண்டபாலை யாயிரும்
உடலின்நோய்கள் போக்கிட இலவசமாய்ச் சேர்ந்திட
கடலின்பரப்பு மென்றிட பரந்ததாக ஓர்மனை
சிறந்தமருந்தின் பெருமனை தந்தபெருமை தானுமே
அற்புதமாய் இருந்திடும் காலம்கடந்து உறைந்திடும்
_________________
9
பரந்தஇந்த உலகெலாம் நிறைந்தகலியின் கொடுமையால்
சிறந்தநல்ல பண்புகள் தொலைந்துதானே போனது
மறத்தின்ஆட்சி மனதினில் நிலையும்கொண்டு இருந்தது
அறத்தின்சாயல் இன்றியே தன்னலமே மிகுந்தது
நிறைந்ததன் னலம்தனைப் பிறந்தஅன்பின் சேவையால்
பறந்தடிக்கச் செய்யலாம் என்றுரைத்த தன்றியும்
சிறந்தசேவைத் தொண்டரின் படைஅமைத்துப் பாரெலாம்
பெரியசெயலைப் புரிந்தவ ஏழைகளைக் காத்தவ
_________________
10
சிறந்தநல்ல பண்பினை சிறிதுசிறிது மேயென
நிறைந்து கொள்ளலாகவே மனதில்வந்து சேர்ந்திட
அன்புகொண்டு அன்பது செய்தமாற்றம் ஒன்றுமே
அற்புதத்தின் அற்புதம் நெஞ்சில்நிற்கு மேநிதம்
_________________
13.ஈரநெஞ்சின் சேவை ஈசன்துஞ்சும் பூஜை
வாரம்தோறும் யாகம்போன்ற மிகஉயர்ந்த பூஜையும்
சேரும்நல்ல மணம்மிகுந்த தீபதூப மலர்களும்
கோரும்வரம் பெறுவதற்கு அவியில்சொரியும் அர்ப்பணம்
யாவுமாகும் சிறியதாக ஈரம்கொண்ட சேவைமுன்
என்றஉப தேசம்தன்னை செய்வதுடன் அமைந்திடா
திருந்துநீ செயல்புரிந்து சேவைபல செய்தது
உலகறியும் உலகுறையும் உலகழியும் வரையிலும்
உணர்த்திவரும் மானிடர்க்கு சேவைபூஜை என்பதை
கிராமசேவை யாகபூஜை பிரேமசேவை ராமபூஜை
உளம்கனிந்த உலகசேவை மனம்இனிக்கும் யோகநிட்டை
மனம்இருக்கும் மாயச்சேட்டை கலங்கிநிற்கும் சேறின்குட்டை
கணத்தழிக்கும் தூயசேவை காட்டிநிற்கும் ராஜபாட்டை
களம்புகுந்து நீயுமே கீதைதன்னில் சொன்னது
புலம்பிறந்து கலியில்நீ அன்பினாலே செய்தது
உளம்நிறைந்து தங்குது பலம்கொடுத்துக் காக்குது
மனம்பிறந்து அன்பது வளம்கொடுத்து ஓங்குது
குளம்நிறைந்த தாமரை மலரவந்த ஆதவா
உளம்நிறைந்து மேநிறை வளரவந்த தூதுவா
சிதம்பிறந்த ஜோதியே நடம்தனில் சதாசிவா
மதம்கடந்த மானிடப் பிறப்பெடுத்த மாதவா
வரம்கொடுத்து யாண்டுமே சிறப்பளிக்க வேண்டுமே
கரம்கொடுத்துக் காத்திட பிரேமசாயி வடிவிலே
பிறப்பெடுத்து மீண்டும்நீ அவதரித்தது உலகிலே
அலைந்திருக்கும் நெஞ்சினை நிலைப்படுத்து தெய்வமே
_______________________________________________
வயிற்றில்பசி வந்திட பத்தும்பறக்கும் பட்டென
கயிற்றில்இறுகும் கழுத்தென மயக்கம்வரும் சட்டென
துயரில்நெஞ்சம் வாடிட கண்மயங்கும் பஞ்சென
வயிறும்தோன்றும் குகையென உலரும்நாவும் வறண்டிட
துயரம்இல்லை யேஇனி எனகனிந்து மேபசி
துயரம்இல்லை யேஇனி எனகனிந்து மேபசி
போக்குமன்ன பூரணி எண்ணம்தன்னி லேயும்நீ
யார்க்கும்நல்ல தேவிநீ மனம்திறக்கும் சாவிநீ
யார்க்கும்நல்ல தேவிநீ மனம்திறக்கும் சாவிநீ
காக்கும்நல்ல தெய்வம்நீ சேர்த்தணைக்கு மன்னைநீ
_______________________________________________
குடிநீர் சேவை
குடிக்க நீருமின்றியே தவித்தமக்கள் கோடியாம்
எடுத்தஒரே முடிவினால் மனதின்அன்பு ஊற்றினால்
கிடைத்தநீரின் பலனையே அடைந்தஊரும் ஆயிரம்
நடந்ததாக யாருமே அறிந்திடாத தாயிரும்
துயரம்கொண்ட அழுகைநீர் துடைத்ததங்கு நீருமே
வியக்குமா றிருப்பதைச் சென்றுநீரும் பாருமே
அரவமின்றி ஆற்றிய பெருமைகூற முயன்றிட
*ஆயிரம்நா அரவமும் இயன்றிடாமல் தவிக்குமே *ஆயிரம்நா அரவமும் = ஆதிசேஷன்
Please visit : http://www.sathyasai.org/saiwater/content.htm
_______________________________________________
கல்விச் சேவை
அறிவுப்பசியைத் தூண்டிட அதனைசென்று போக்கிட
சிறக்கவேண்டும் பள்ளிகள் சென்றுபயிலப் பிள்ளைகள்
குறைபடாத வண்ணமாய் அறிவைப்பெருக்கத் திண்ணமாய்
கருணதன்னின் எண்ணமாய் நாட்டின்அறிவுச் சின்னமாய்
திறந்துவைத்த பள்ளியும் பல்கலையின் கழகமும்
வளர்ந்துமின்று நிற்குது அறிவளித்துச் சிறக்குது
ஏட்டுச்சுரை கல்வியன்று இலவசமாய்க் கிடைப்பது
கேட்டுமெங்கும் கிடைத்திடாத மதிப்புசார்ந்த அறிவது
Please visit :
http://sssihl.edu.in/
http://www.sathyasai.org/saieducation/content.htm
Sathya Sai Institute of Educare Chromepet
_______________________________________________
செலவுசெய்து நீக்கிட நேர்வதாகும் உயிர்விட
உலவுகின்ற தெய்வமாம் கருணைகொண்ட அன்னையாம்
களைந்தெடுக்க நோயினை சுருட்டிவைக்கப் பாயினை
முளைத்தெழுந்த மருந்தகம் அளித்துநின்ற சாய்தனை
நினைத்துநெஞ்சில் தொழுதிடல் மட்டுமன்றி சேவையை
விதைத்திருக்க லாகுவோம் பதைத்தநெஞ்சைத் தேற்றுவோம்
உலவுகின்ற தெய்வமாம் கருணைகொண்ட அன்னையாம்
களைந்தெடுக்க நோயினை சுருட்டிவைக்கப் பாயினை
முளைத்தெழுந்த மருந்தகம் அளித்துநின்ற சாய்தனை
நினைத்துநெஞ்சில் தொழுதிடல் மட்டுமன்றி சேவையை
விதைத்திருக்க லாகுவோம் பதைத்தநெஞ்சைத் தேற்றுவோம்
Please visit : http://www.sssmt.org.in/pages/index.asp
_______________________________________________
கலாசார சேவை
அன்னம்தந்து உடலைக் காத்து
நீரைத்தந்து தாகம் தீர்த்து
உடலில்வரும் நோயில் காத்து
அறிவுதரும் கல்வி ஈந்து
போற்றிக்காத்தல் யாவுமே
தீபஜோதி ஆன்மமே
மாசுநீங்கி ஒளிர்ந்திட
பண்பு நிலை நாட்டிட
ஜோதி யாய்நீ தந்தது
சைத னியம் ஆகுது
நாதியற்ற ஜீவனுக்கு
பாதைதன்னைக் காட்டுது
______________
ஏழைதுயரம் போக்கும் சாயி
கிராமசேவை தன்னில் சாயி
தீனஜன தரணத் திட்டம்
தன்னில்வீடு தந்த சாயி
முதியோரில்ல மளித்த சாயி
கதியிலாரைக் காத்த சாயி
செயலில் ஏற்றம் தந்த சாயி
மெள்ளஏற ஏணி சாயி
மெள்ளஏற ஏணி சாயி
இயற்கைசீற்றம் தணித்த சாயி
வெள்ளநீரில் தோணி சாயி
*வெள்ளபெருக்கில் அழிந்த நகரம்
தன்னில்வீடு தந்த சாயி
உலகமெங்கும் பரவி நிற்கும்
நிறுவனங்கள் மூலம் மனதில்
அன்புஜோதி ஏற்றும் சாயி
மதவிணக்கம் தந்த சாயி
உலகின் அன்னை அன்புசாயி
உலவிச் சென்ற இறைவன் சாயி
கரைந்து மனம் கசிந்த ழைக்க
விரைந்து வரும் தந்தை சாயி
சேவைசெய்த உயர்வு சாயி
சேவைதன்னின் உயர்வும் சாயி
சேவைமூலம் மனதில் ஞானம்
விரைவில்தந்த தெய்வம் சாயி
பிறக்கவைக்கும் சக்தி சாயி
பிறப்பறுக்கும் முக்தி சாயி
சிறப்பிலெமை வைக்கும் சாயி
கறைபடாத மேன்மை சாயி
வரவிருக்கும் காலம் தன்னில்
பிறக்கவேண்டும் ப்ரேம சாயி
சிறக்கவெங்கள் இதயம் தன்னில்
இருக்கவேண்டும் என்றும் சாயி..!
*வெள்ளபெருக்கில் அழிந்த நகரம் = ஒரிஸ்ஸா வெள்ள நிவாரணம்
________________________
உலகமெங்கும் சாயி மையம்
கணக்கில் லாமல் இருக்குது
மனதினிலே சுயமில்லாமல்
கணக்கில் லாமல் இருக்குது
மனதினிலே சுயமில்லாமல்
சேவை செய்து சிறக்குது
சாயி மையம் உள்ளநாடு
நூற்றி னோடு முப்பது
எண்ணி லிரண்டு ஆயிரத்து
ஐநூ றுமாய் இருக்குது
உயிர்கள் துன்பம் துடைத்திடவே
அயர் வுராது உழைக்குது
பெயர் சொலவே உலகில்தேட
கிடைத் திடாமல் இருக்குது
Please see :
http://www.sathyasai.org/organize/content.htm
http://www.saibabaofindia.com/sai_baba_centers.htm
http://www.sathyasai.org/organize/content.htm
http://www.saibabaofindia.com/sai_baba_centers.htm
__________________
11.விரூபாக்ஷ சொரூபன்
ஆந்திரத்தின் மாநகர் களில்பெல்லாரி பெரியது
அதன்தலைவர் கனவிலே தோன்றிதேவன் சொன்னது
இறையும்மனித னாகியே அருகிலேதான் உறையுது
காண்பதாகக் கனவினிலே சிறுவனையும் காட்டியது
கனவுகலைந்த தலைவரும் மனைவியிடம் பேசினார்
கனவில்வந்த காட்சிதனை எடுத்துக்கூற லாயினார்
உனக்குமட்டு மல்லகனவு எனக்கும்கூட வந்தது
நினைத்துநினைத்து மகிழுமாறு சிறுவன்முகமும் தெரிந்தது
என்னேநமது பாக்கியம் விண்ணோர்போற்றும் ஜோதியும்
தன்னேவந்து காட்டுது தனதருளைக் கூட்டுது
இன்னுமேன்நீர் நிற்கிறீர் விரைந்திடாமல் இருக்கிறீர்
என்றுமனைவி விரட்டினாள் கன்றுக்கேங்கும் பசுவுமாய்
விரைந்துசென்று தலைவரும் சோதரனை வேண்டினார்
குறைந்தபட்சம் மூன்றுநாள் அனுப்பச்சொல்லி கெஞ்சினார்
உயர்ந்தபதவி உள்ளவர் உலகத்திலே நல்லவர்
பணிந்துகேட்கை யில்மனம் இறங்கவாகுமே கணம்
தனியே ராஜுதன்னையே அனுப்பிடாத மனத்தினால்
தானும்கிளம்பிப் புறப்பட்டார் தம்பியுடன் இருந்திட்டார்
மகிழ்ந்ததலைவர் ராஜுவை வீட்டில்வைத்து பூஜித்தார்
புகழ்ந்துஅவனில் இறைவனைக் காணவேண்டும் என்றிட்டார்
தலைவர்மனைவி இருவரும் தனயன்தம்பி தன்னையே
கலைமிகுந்த நகரமாம் ஹம்பிஅழைத்துச் சென்றனர்
விலையிலாத பெருமையில் உறையும்பரம சிவனுமாம்
விரூபாக்ஷர் கோவிலை விரைந்துசென்று சேர்ந்தனர்
சிறுவன்கோவில் வாசலில் நின்றுசற்று தயங்கினன்
வருவதற்கு எனக்குமே உடலில்சுகமும் இல்லையே
பொறுமையாக நீங்களும் கண்டுவணங்கி வாருங்கள்
திறமையாக நானுமே பைகள்பொருட்கள் நோக்குவேன்
என்றுசொன்ன சொல்லினால் கோபமுற்ற தனயனும்
சென்றுவணங்கச் சிறுவனை வற்புறுத்த லாயினன்
நின்றுகண்ட தலைவரும் அவன்விருப்பம் போலவே
செய்திடவே சொல்லினார் அவனின்சொல்லை மருத்திடார்
கோவில்உள்ளே சென்றனர் இறைவன்தன்னைப் பணிந்தனர்
கண்திறந்து நோக்கினார் தூபதீபம் கண்டிட
கண்நிறைந்த காட்சியாய் சத்யம்அங்கு தெரிந்தனன்
விண்நிறைந்த வாமனன் போலநின்ற சிறுவனாய்
விண்நிறைந்த வாமனன் போலநின்ற சிறுவனாய்
பக்திகொண்ட நெஞ்சினால் தலைவர்உண்மை உணர்ந்திட்டார்
சுற்றியுள்ள யாவரும் சிவனின்சிலைக்குப் பதிலென
சக்திஉமை பாகனாய் விரூபஸ்வ ரூபனாய்
சத்யம்தன்னைக் கண்டனர் மகிழ்ச்சிமனதில் கொண்டனர்
சக்திஉமை பாகனாய் விரூபஸ்வ ரூபனாய்
சத்யம்தன்னைக் கண்டனர் மகிழ்ச்சிமனதில் கொண்டனர்
தனயன்இதனைக் கண்டனன் விரைந்துவெளியில் சென்றனன்
வினயத்துடன் சிறுவன்அங்கு அமர்ந்திருக்கக் கண்டனன்
புரிந்திடாத வியப்பினிலே கலக்கம்மனதில் கொண்டனன்
அறிந்திடாத மானுடத்தின் மயக்கத்திலே இருந்தனன்
அறிந்திடாத மானுடத்தின் மயக்கத்திலே இருந்தனன்
தெரிந்திருந்த தம்பதியர் மட்டும்மனதில் பக்தியால்
தெரிந்திடாமல் இருக்கும்சிவனை சிறுவனிடம் கண்டனர்
அவதரித்துப் பிறப்பெடுத்து பிறப்பறுக்கும் கருணையால்
அவதரித்துப் பிறப்பெடுத்து பிறப்பறுக்கும் கருணையால்
அருளிடவே மண்ணில்வந்த விரூபாட்சன் என்றனர்
ஹம்பிவிஜயம் முடிந்தது நாட்கள்நான்கு மானது
தம்பிபள்ளி சென்றிட வேண்டியுமே இருக்குது
திரும்பிடவே நாங்களே விடைகொடுப்பீர் நீங்களே
அன்பினாலே மனம்கரைந்த அண்ணணுமே சொல்லினார்
நீங்கள்வந்து இருந்தது மனதில்நிறைவைத் தந்தது
எங்கள்சென்ற பிறவியின் புண்ணியத்தி னாலது
உங்களையே அனுப்பிட மனமுமுல்லை ஆயினும்
எங்களுடன் மட்டுமே சத்யம்தனை நிறுத்திட
நியாயமில்லை ஆகவே மனமிலாமல் இசைகிறோம்
என்றுசொல்லி தலைவரும் தங்கத்தினா லானதோர்
ஊசியினைச் சட்டையில் அழகுறவே அணிந்திட
ராஜுவுக்கு அளித்திட்டார் ஏற்றிடவே வேண்டினார்
கொடுத்திடவே வந்தவன் கொள்ளநெஞ்சில் இசைவிலை
மறுத்திடவே செய்வதாய் நினைத்திடாமல் நீங்களும்
பொறுத்துமென்னை அனுப்புங்கள் கருத்தில்என்னைக் கொள்ளுங்கள்
என்றுசொல்லி மறுத்தனன் குன்றெடுத்த கண்ணனும்
தலைவர்மனம் வருந்திட்டார் கண்ணீர்விட்டு அழுதிட்டார்
நிலையில்சற்று இறங்கிவரச் சோதரனை அழைத்திட்டார்
விலையிலாத அன்பின்பரிசு தடையுமில்லை கொள்வது
நிலையில்நீயும் இறங்கிவருதல் இழுக்குமல்ல உனக்கது
சளைத்திடாத வற்புறுத்தல் தன்னால்அன்று சத்தியம்
தலைவர்மனதின் அன்பினாலே மட்டும்பரிசு கொண்டது
ஊசிஎடுத்துச் சட்டையில்தன் அன்பின்அம்பாய்த் தைத்ததுபாசத்திலே தனைஇழந்த தலைவர் நல்லநெஞ்சது..!
Subscribe to:
Posts (Atom)