Thursday, February 16, 2012

15. ஸ்வாமி என்னும் சொல்லிலே ஈரம் ஊரும் நெஞ்சிலே



ஸ்வாமிஸ்வாமி என்றுசொல்ல கண்ணில்நீரும் முட்டுது
ஏமிஏமி என்னும்ஒலி காதைவந்து எட்டுது
நம்மில்நம்மில் என்றுஉன்னை நம்பிநாங்கள் நிற்கையில்
ஓமில்ஓமில் நின்றிருக்க ஓடிசெல்லல் நியாயமோ..!

விரைந்துநெஞ் செரித்தசேதி பற்றியதீ பஞ்சிலே
மறைந்துநீ இருந்திருப்ப தென்றுமெங்கள் நெஞ்சிலே
நிறைவுறாது நீயுமிங்கு விட்டுசென்ற உன்'இடம்'
சிறப்புறாது எங்கள்நெஞ்சம் சிறைப்படாம லுன்னிடம்

கறைபடாத நெஞ்சம்கொண்டு சேவைசெய்யப் பழகுவோம்
கரைந்தநெஞ்சின் ஈரம்கொண்டு பாவம்தன்னைப் போக்குவோம்
பறந்திடாத வண்ணம் நெஞ்சில் என்றுமேநீ தங்கிடு
விரைந்துநீயும் பிரேமசாயி வடிவம்தன்னில் வந்திடு
_______________





ஆடிய நின்பதம் நினைவினில் தேடி
 
பாடிய நெஞ்சினில் ஒளிர்ந்திடும் கூடி
சோதிமுன் வானத்தில் தெரிந்திடும் கோடி
சூரியன் நாணியே ஒளிந்திடும் ஓடி

நாடியே நின்புகழ் சொல்லிடக் கோடி
கோடியே பாவலர் யாவரும் கூடி
கோடியே நாவுறச் சொல்லினும் பாடி
முடிந்திடும் பின்வரும் யுகங்களும் கோடி
 
ஓம் ஸ்ரீ சாய்ராம்






No comments:

Post a Comment