Friday, June 26, 2020

முடிவல்ல தொடக்கம்








எந்தமதமும் சம்மதமே என்று கூறினான்

மும்மலமும் அக்கணமே அழித்துக் காட்டினான்

வறண்டபாலை நிலத்தில்-குளிர்ந்த நீரைப் பாய்ச்சினான்

சிறந்த-சோலை..யாகஅதனை மாற்றிக் காட்டினான்

 

பெரியமதிப்புக் கல்வி-கற்க சாலை-தந்தவன்

சிறியகுழந்தை..யானபொழுதே சேவை-செய்தவன்

உண்ண-உணவு தந்து-மண்ணில் தாயுமானவன்

குற்றம்குறைகள் மறக்கும்-மனதில் சேயுமானவன்

 

ஸ்வாமி-செய்த அற்புதங்கள் கோடி-கோடியே

அதனை-ஓடிக் கேட்டிடுவோம் பலரை-நாடியே

திதிப்பதான அவனின்-நாமம் இனிய-தோடியே

சேர்ந்து-நாமும் ஆடிடுவோம் நாமம்-பாடியே

 

அன்பு-கொண்ட நெஞ்சம்-தன்னை நாமும்-கொள்ளுவோம்

துன்பம்-கொண்ட நெஞ்சம்-தனக்கு சேவை-செய்குவோம்

பின்பு-நமக்குக் கிடைப்பதென்ன என்று-எண்ணுவோம்

முன்பு-சாயி கொடுத்த-அன்பு மீண்டும்-காணுவோம்

 

நெஞ்சம்-எண்ணும் எண்ணம்-முழுதும் அவனைக்-கொள்ளுவோம்

இன்னும்-இன்னும் என்று-சாயி நாமம் சொல்லுவோம்

என்றும் என்றும் என்றும் சாயி நாமம் சொல்லுவோம்

என்றும் என்றும் என்றும் சாயி நாமம் சொல்லுவோம்

சாயி நாமம்-சொல்லுவோம் ..நாம் என்றும்-சொல்லுவோம்


சாயிராம சாயிராம சாயிராம-ராம் (2)

சாயி சாயிராம ராம் (2)


________________________________


Subha 

Finishing lines

Gayathri Sairam

(ஜகம் புகழும் மெட்டு)

மனம்-கனிந்தே பாடிடுவோம் சாயிசரிதமே

அதன் அருள்மழையில் நனைந்திருப்போம் என்றும் என்றுமே

மனம் கனிந்தே பாடிடுவோம் சாயிசரிதமே


(Gayathri Sairam)

விருத்தம்

ஸ்ரீசாயிராம் 

சிறந்த-தாயெனக் காக்கும்-தெய்வம்

ஸ்ரீசா..யிராம் 

ரத்னாகரகுலம் வந்ததீபம்

ஆறாத-துயரம் அவன்-முகம் காணப்போகும்

சாயீ விடாதருள் கரிசனம் தரும்  நம்ஸ்வாமி…


_____________________________________________

அசத்தோமா  சத்கமய 

தமஸோமா ஜ்யோதிர் கமய

ம்ருத்யோர்மா அம்ருதம் கமய 


ஓம் .. சாந்தி ..  சாந்தி   ..  சாந்தி


மஹா மங்கள ஆரத்தி 

ஜெய் போலோ பகவான் சத்ய சாய் பாபாஜிக்கி  ...ஜெய் 

சமஸ்தலோகா சுகினோ பவந்து  (3)


பரமம் பவித்ரம் பாபா விபூதிம் 

பரமம் விசித்ரம் லீலா விபூதிம் 

பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷப் ப்ரதானம் 

பாபா விபூதிம் இதமாச்ரயாமி 


ஓம் .. சாந்தி ..  சாந்தி   ..  சாந்தி


சாயிராம்










No comments:

Post a Comment