Saturday, June 27, 2020

சத்ய சாயி மஹிமை





யாதுமாக நின்று-ஊழில் யாதும்-போக சென்றழித்து

தூய்மையாகி..யேதிடத்து நின்றிருக்கு..முன்னிடத்து 

ஓய்ந்திடாத.. ர்திறத்து தோன்றுகின்ற உயிர்கள்சென்று

ஓயுகின்ற..தோரிடத்தின் ஊழினுள்ளு..மேஇருந்து

 

நிகழ்வதில் இருந்திருந்த..ளிப்பதில் மகிழ்ந்திருந்து 

விழைவுடன்-ப..டைத்திருந்த..னைத்துமிங்கு காத்துநின்று 

பிழைபடா துடைதிறத்.. தெடுத்து-நின் கொடைதனைக் 

குறைபடா..தளிக்கும்நீயும் மன்னர்-மன்ன..னல்லவோ..!

 _______________


ஆடிய நின்பதம் நினைவினில் தேடி

பாடிய நெஞ்சினில் ஒளிர்ந்திடும் கூடி

ஜோதிமுன் வானத்தில் தெரிந்திடும் கோடி 

சூரியன் நாணியே ஒளிந்திடும் ஓடி  


நாடியே நின்புகழ் சொல்லிடக் கோடி

கோடியே பாவலர் யாவரும் கூடி

கோடியே நாவுறச் சொல்லினும் பாடி

முடிந்திடும் பின்வரும் யுகங்களும்  கோடி 

______________


ஓம் சாந்தி .. சாந்தி.. சாந்தி

ஓம் சாயீச்வராய வித்மஹே
சத்ய தேவாய தீ மஹி
தன்ன சர்வ ப்ரசோதயாத்   

ஓம் சாந்தி .. சாந்தி.. சாந்தி





No comments:

Post a Comment