Monday, June 22, 2020

தபோவனம் அத்யாயம் ஆறு





கேட்டவர்க்கு கேட்டபடி காட்சி-தந்த ஸ்வாமி-நீ

யாகம்-தன்னில் மகிழ்ந்து-நீயும் தந்த-காட்சி கணபதி

அவனின்-தம்பி சுப்ரமண்ய ரூபம்-தன்னைக் காட்டியே

பக்தர்-நெஞ்சில் பக்தி-இன்னும் பெருகச்-செய்த மாட்சி-நீ

கலியில்-சாயி ராமனாக வந்து-கருணை தந்து-நீ

விதியை-மாற்றும் ஆதி-பரம் பொருளின் வடிவம்-என்பதை

உணர்த்த-பரம சிவனின்-தோற்றம் தன்னில்-வந்து காட்டினாய்

அன்று-வந்த ராமனாய் பின்னர்-வந்த ஷ்யாமனாய்

புத்தராக ஏசுவாக அரிய-தத்த வடிவமாய்

பக்தர்-முன்னர் தோன்றினாய் உனது-உண்மை காட்டினாய்

 

யாவும்-ஒன்று எதிலும்-ஒன்று உள்ளிருக்கும் தெய்வம்-ஒன்று

ஆசி-பெற்ற நெஞ்சினுக்குத் தோன்றும்-நன்று சாயி-என்று  



No comments:

Post a Comment